கேள்விகள் உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை; ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப் பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்; வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம் மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! -பாரதி