Sunday, September 09, 2012

2004-2012

இந்தப் பதிவில் நான் இடுகை (கேள்வி கேட்டு) இட்டுப் பல வருடங்களாகி விட்டன. இடையில் பல நிகழ்வுகள்  குழந்தைப் பிறப்பு / இட மாற்றம் போன்ற வெளி மாற்றங்களும் சில மன மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.  தீவிரமாகப் பிடித்து வைத்திருந்த பல கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 
இடையில் திடீரென ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு ஜோதிடமும் கற்க ஆரம்பித்தேன். கொஞ்சம் ஆன்மிகம் குறித்தும் ஆராய ஆரம்பித்தேன். பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. புரிந்து வைத்திருந்த பல விஷயங்கள் திரும்பக் குழம்பி விட்டன !! எனவே குழப்பம் தீர வேண்டித் திரும்ப எழுதுவோம் என முடிவெடுத்து விட்டேன்.

"கேள்விகளை நான் கேட்கட்டுமா, இல்லை நீ கேட்கிறாயா"
"இல்லை இல்லை, நானே கேட்கிறேன், எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்"  இந்தத் திருவிளையாடல் திரைப்பட வசனம் உங்களுக்கு நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல....

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ozgQLP3o6gY#t=330s

எனவே கேட்கட்டுமா ?